சரக்கு ஊற்றிக்கொடுத்த மனைவி… தயாராக இருந்த கள்ளக்காதலன்! வரப்போவதை அறியாத அப்பாவி கணவன்!

Webdunia
ஞாயிறு, 19 ஜூலை 2020 (11:57 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கணவருக்கு அளவுக்கதிகமாக சரக்கு ஊற்றிக்கொடுத்து மட்டையாக்கி அவரை கள்ளக்காதலன் துணையோடு கொலை செய்துள்ளார் மனைவி.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை, கீழாத்துகுழி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள் தேவராஜ் மற்றும் புஷ்பா. இவர்கள் இருவரும் மைசூரில் மிளகுத் தோட்டத்தில் தங்கள் இரு குழந்தைகளுடன் வேலை செய்துள்ளனர். இப்போது கொரோனா லாக்டவுன் காரணமாக சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த, 7-ம் தேதி கல்வராயன்மலை வனப்பகுதியில் தேவராஜின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் கொலைக்கான பின்னணி குறித்து தெரியவந்துள்ளது. மைசூரில் வேலை பார்த்த போது புஷ்பாவுக்கு மணி என்ற இளைஞரோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஊருக்கு திரும்பிய நிலையிலும் மணி மற்றும் புஷ்பாவின் காதல் தொலைபேசி வாயிலாக தொடர்ந்துள்ளது. ஒரு கட்டத்தில் இதையறிந்த தேவராஜ் மனைவியைக் கண்டித்து சண்டை போட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட கணவனைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார் புஷ்பா.  இதற்காக அவருக்கு 6 ஆம் தேதி இரவு அளவுக்கதிகமாக சரக்கை ஊற்றிக் கொடுத்துவிட்டு மணியை வரவழைத்துக் கொலை செய்துள்ளார். அதன் பின் மணியுடன் வந்த சுரேஷோடு சேர்ந்து பைக்கில் வைத்து பிணத்தை கல்வராயன்மலை வனப்பகுதியில் வீசியுள்ளனர். இந்த கொலை வழக்கு சம்மந்தமாக போலீஸார் மணி மற்றும் புஷ்பாவைக் கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழக அரசு பேருந்து டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்..

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ ரயில் இயக்க ஒப்புதல்.. சேவை தொடங்குவது எப்போது?

ஓபிஎஸ்க்கு ஒருபோதும் அதிமுகவில் இனி இடமில்லை.. பாஜகவுக்கு 30 தொகுதிகள்: சேலம் மணிகண்டன்

ஆனந்த் அம்பானியின் வனவிலங்கு மையத்தில் மெஸ்ஸி.. யானையுடன் கால்பந்து விளையாடினார்..!

திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகாது.. ஒரே ஒரு காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments