புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்திவிட்டு 24 பேரை சிறைப்பிடித்து சென்றுள்ள நிகழ்வு மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று 200 படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அப்போது அந்த பகுதிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில் ராஜா முகமது என்ற மீனவர்கள் படுகாயம் அடைந்தார். மேலும் 24 பேரை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்து சென்றனர். மேலும் மீனவர்களின் 7 படகுகளையும் அவர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.
தாக்குதல் குறித்து சகமீனவர் சின்ன அடைக்கலம் தகவல் கொடுத்ததாக மீனவர் சங்கத் தலைவர் கூறியுள்ளார். காயம் அடைந்த ராஜா முகமது மணல்மேல்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.