கூட்டணி குறித்து 22ஆம் தேதி அறிவிப்பு : கிருஷ்ணசாமி
மதுரை , திங்கள், 16 மார்ச் 2009 (13:06 IST)
மக்களவைத் தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்வது என்பது குறித்து வரும் 22ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த கட்சியுடன் கூட்டணி அமைப்பது குறித்து வரும் 22ஆம் தேதி கட்சி பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தொண்டர்களுடன் ஆலோசித்து அறிவிக்க முடிவு செய்துள்ளேன். நான் எந்த தொகுதியில் போட்டியிடுவேன் என்பதையும் அன்றையே தினமே அறிவிப்பேன்.கடந்த மக்களவைத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சி லட்சம் ஓட்டுக்களை பெற்றது. தமிழகத்தில் புதிய தமிழகம் கட்சி தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.இந்த தேர்தலிலும் அதை நிரூபிக்கும் வகையில் இருக்கும். தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியால் புதிய தமிழகம் கட்சிக்கு எந்தவித பாதிப்பு ஏற்படாது என்றார் கிருஷ்ணசாமி.