தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்த பதில்கள் வருமாறு :-
செய்தியாளர் :- உங்கள் கூட்டணிக்கு வர மாட்டோம் என்று இடதுசாரிகள் தெரிவித்திருக்கிறார்களே?
கருணாநிதி :- அதைப் பற்றி எனக்குத் தெரியாது.
செய்தியாளர் :- ஜெயலலிதா தன்னைப் பிரதமராக முயற்சி செய்வதால், தமிழ்நாட்டு மக்கள் அவருக்குத் தான் வாக்களிப்பார்கள் என்று சொல்கிறார்களே, அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
கருணாநிதி :- அவர்கள் முயற்சி செய்வதும் தெரியாது; தமிழ்நாட்டு மக்கள் அவருக்கு வாக்களிக்கத் தயாராக இருப்பார்கள் என்பதும் தெரியாது!
செய்தியாளர் :- பா.ஜ.க. சார்பாக புதிய கூட்டணி தமிழ்நாட்டில் உருவாகியிருக்கிறது. அது திராவிடக் கட்சிகளுக்கு எந்த அளவிற்கு சாதக பாதகங்களை ஏற்படுத்தும்?
கருணாநிதி :-ஏற்கனவே எப்படி அமைந்ததோ, அப்படித் தான் இப்போதும் அமையும்.