கூடங்குளம் அணு உலை பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு நியமித்த வல்லுநர் குழு இன்று தமிழக முதல்வரிடம் அறிக்கை சமர்பித்தது.
அந்த ஆய்வறிக்கையில் , கூடங்குளம் அணு உலை பாதுகாப்பானது என தெரிவித்துள்ளது. இந்த அறிக்கையை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வரவேற்றுள்ளார்.
மேலும், அவர் கூறுகையில் இன்னும் 15 நாட்களுக்குள் கூடங்குளத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என தெரிவித்துள்ளார்.