Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கூடங்குளம் போராட்டம் : வன்னி அரசு உள்ளிட்டோர் கைது

கூடங்குளம் போராட்டம் : வன்னி அரசு உள்ளிட்டோர் கைது
, சனி, 24 மார்ச் 2012 (15:09 IST)
webdunia photo
FILE
கூடங்குளம் அணு மின் நிலையத்தை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்திய வன்னியரசு, சதிஷ், முகிலன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அணுஉலைக்கு எதிராக நேற்று பாளையங்கோட்டையில், மக்கள் கூட்டமைப்பின் சார்பில் ஏராளமானோர் பங்கேற்ற போராட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற வைகோ, சீமான், கொளத்தூர் மணி உள்ளிட்ட எராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டபின், போராட்டத்தில் கலந்துகொண்ட தமிழக இளைஞர் எழுச்சி பாசாறையை சேர்ந்த சதீஷ்குமார் என்ற இளைஞரை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர் மீது வழக்குகளைப் பதிவு செய்து, நள்ளிரவில் சிறையில் அடைத்து உள்ளனர்.

இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னிஅரசுவை நேற்று நள்ளிரவில் இராஜபாளையம் அருகே கைது செய்துள்ளனர். அவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேப்போன்று இடிந்த கரையில் அணுஉலை எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று வந்த முகிலன் என்பவர் மீது வழக்குகளைப் போட்டு, கைது செய்து காவல்துறை சிறையில் அடைத்து உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil