Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்

- ஈரொடு செய்தியாளர் வேலுச்சாமி

Webdunia
வியாழன், 21 மார்ச் 2013 (15:37 IST)
FILE
ஈரோடு அருகே குடிநீர் கேட்டு காலிகுடத்துடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே உள்ளது அய்யன்சாலை. இது உத்தண்டியூர் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமமாகும். இங்கு குடிநீர் தட்டுப்பாடு கடுமையாக உள்ளது பஞ்சாயத்து நிர்வாகம் அய்யன்சாலைக்கு தண்ணீர் ச‌ரிவர வழங்குவதில்லை என இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.

பஞ்சாயத்து நிர்வாகத்தின் இந்த போக்கை கண்டித்து அய்யன்சாலைக்கு குடிநீர் வழங்ககோ‌ரி நேற்று காலை ஒன்பது மணிக்கு இப்பகுதி பெண்கள் திடீரென காலிகுடத்துடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சத்தியமங்கலத்தில் இருந்து பவானிசாகர், தொட்டம்பாளையம், மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் பாதிக்கப்பட்டது.

தகவல் தெ‌ரிந்ததும் தாசில்தார் கண்ணப்பன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சௌந்திரராஜன் உள்ளிட்ட அதிகா‌ரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மறியல் செய்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அய்யன்சாலை கிராமத்திற்கு குடிநீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகா‌ரிகள் உறுதியளித்தனர். இதனால் 9.30 மணிக்கு சாலைமறியல் கைவிடப்பட்டது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments