காமராஜருக்கு கருணாநிதி மரியாதை
சென்னை , வியாழன், 15 ஜூலை 2010 (16:06 IST)
சென்னை திருவல்லிக்கேணி சீமாட்டி வெலிங்டன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவில் அவரது திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மேயர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.வி.தங்கபாலு, உயர்கல்வித்துறை முதன்மைச் செயலர் கணேசன், பள்ளிக்கல்வி இயக்குநர் பெருமாள்சாமி ஆகியோர் பங்கேற்றனர்.