Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலியை கைப்பிடித்தார் யுவன்சங்கர் ராஜா; திருப்பதியில் திருமணம்

காதலியை கைப்பிடித்தார் யுவன்சங்கர் ராஜா; திருப்பதியில் திருமணம்
திருப்பதி , வியாழன், 1 செப்டம்பர் 2011 (14:27 IST)
திருப்பதி கோவிலில் இன்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தனது காதலியை இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தாலிக்கட்டி மணம் புரிந்து கொண்டார்.

இளையரஜாவின் மகன் இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், சுஜன்யா என்பவருக்கும் இடையே ஏற்கனவே திருமணம் நடந்தது. ஆனால் கருத்துவேறுபாடுகள் காரணமாக இந்த திருமணம் குறுகிய காலத்திலேயே முறிந்தது.இருவரும் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

இதன் பின்னர் யுவன்சங்கர் ராஜாவுக்கும், ஷில்பா என்ற டாக்டர் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்கள் திருமணத்துக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்தனர்.

இதையடுத்து திருப்பதியில் இன்று காலை யுவன்சங்கர் ராஜாவுக்கும்,ஷில்பாவுக்கும் திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில்யுவன்சங்கர் ராஜாவின் தந்தை இளையராஜா மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நாளை நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil