Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் - ஜெயலலிதா

காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் - ஜெயலலிதா

Ilavarasan

, ஞாயிறு, 13 ஏப்ரல் 2014 (21:15 IST)
காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று கரூரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
கரூர் ராயனூரில் தேர்தல் பிரசாரம் செய்த முதலமைச்சர் ஜெயலலிதா பேசியபோது, தமிழகத்தில் எந்த காலத்திலும் காங்கிரஸ் அல்லது பாஜக கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியாது.
 
கர்நாடகாவில் உள்ள காங்கிரசும், பாஜகவும் காவிரி பிரச்சனையில் ஒரே மாதிரியாக செயல்படுகின்றன. காவிரி நதிநீர் ஆணையத்தால் தமிழகத்துக்கு எந்த பயனும் இல்லை. காவிரி நதிநீர் பிரச்சனையில் பாஜக,காங்கிரஸ் இரு கட்சிகளுமே துரோகம் இழைத்துள்ளன.
 
தமிழகத்தில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளால் காவிரி பிரச்சனையை தீர்க்க இயலாது. காவிரி நதி நீர் பிரச்சனை குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை. காங்கிரஸ்,பாஜக வேட்பாளர்களை டெபாசிட் இழக்கச் செய்யவேண்டும் என்று பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil