கல்பாக்கத்தில் மேலும் ஒரு அணுஉலை 2 ஆண்டுகளில் செயல்படும் என்றும் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றும் தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது.
கல்பாக்கத்தில் எப்போதும்போல் மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் மின்சாரம் தேசிய மின் தொகுப்பு மூலம் பல மாநிலங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படுகிறது.
இதற்கிடையே கல்பாக்கத்தில் 500 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வகையில் மேலும் ஒரு அணுஉலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்ததும் இன்னும் 2 ஆண்டுகளில் மின்சார உற்பத்தி தொடங்கும் என்று தேசிய அணுமின் கழகம் தெரிவித்துள்ளது.
இந்தப்பணி முடிந்ததும் அங்கு அடுத்த அணுஉலைகள் அமைக்கும் பணி தொடங்கும் என்றும் கூறியுள்ளது.