கலைமாமணி விருது இயக்குநர் கலைமணி மரணம்
, செவ்வாய், 3 ஏப்ரல் 2012 (16:03 IST)
16
வயதினிலே படத்துக்கு வசனம் எழுதியவரும், கலைமாமணி விருது பெற்ற இயக்குநர் கலைமணி உடல்நலக் குறைவினால் நேற்றிரவு காலமானார். அவருக்கு வயது 62.ரஜினி, கமல் இணைந்து நடித்த 16 வயதினிலே படத்துக்கு வசனம் எழுதியவர் கலைமணி. முதல் வசந்தம், மண் வாசனை, இங்கேயும் ஒரு கங்கை, சிறைப்பறவை உட்பட 85 படங்களுக்கு வசனம் எழுதிய இவர், கடைசியாக விஜய் நடித்த குருவி படத்திற்கு வசனம் எழுதினார்.மேலும் கோபுரங்கள் சாய்வதில்லை, மனைவி சொல்லே மந்திரம், என்புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்பட 13 படங்களை தயாரித்து உள்ளார்.விஜயகாந்த் நடித்த பொறுத்தது போதும், தெற்கத்தி கள்ளன் மற்றும் எங்க ஊர் ராஜாத்தி போன்ற படங்களை இயக்கியுள்ள இவர் கலைமாமணி விருது பெற்றுள்ளார்.