Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கற்பழிப்பு கு‌ற்ற‌த்‌தி‌ற்கு சாகும்வரை சிறை: கருணாநிதி கருத்து

Webdunia
ஞாயிறு, 6 ஜனவரி 2013 (10:40 IST)
FILE
பா‌லிய‌ல் கொலை செ‌ய்பவ‌ர்களை சாகு‌ம் வரை த‌னிமை‌ச் ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வை‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி கரு‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல்,

கற்பழிப்பு குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று பலர் கூறுகின்றனர். ஆனால், சமூக ஆர்வலர்கள், சட்ட நிபுணர்கள் கூறுவதுபோல், நானும் மரண தண்டனையை ஆதரிக்க மாட்டேன். பாலியல் கொலை செய்பவர்களை சாகும்வரை தனிமைச் சிறையில் அடைத்து வைக்க வேண்டும். எனது கருத்தை மாநில அரசு எடுத்துக் கொள்ளாவிட்டாலும், மத்திய மாநில அரசு இது தொடர்பாக உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்.

முதல்வர் ஜெயலலிதா பாலியல் குற்றவாளிகளைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார். அவ்வாறு கைது செய்யப்படும் குற்றவாளிகள் ஓராண்டு சிறையில் இருந்து வெளியே வந்தபின்னர், அதேபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம்?

பெண்கள் பாதுகாப்புக்கு முதல்வர் அறிவித்துள்ள 13 திட்டங்கள், அவரது நிறைவேறாத வாக்குறுதிகள் பட்டியலில் சேரும். எதிர்க்கட்சியினருக்கு எதிராக குண்டர் சட்டத்தை தவறாக பயன்படுத்துகிறார்கள் எ‌ன்று கருணாநிதி கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதல்வர் வேட்பாளர் ஆகிறாரா சசிதரூர்.. கருத்துக்கணிப்பு என்ன சொல்கிறது?

5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையம்!

529 பேர் ஜூலை 15 முதல் வீட்டுக்கு போங்க.. இண்டெல் நிறுவனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு..!

மனைவியின் கழுத்தை அறுத்த கணவர்: கள்ளக்காதலனின் பிறப்புறுப்பு சிதைப்பு - ஒடிசாவில் பயங்கரம்!

மொத்தமாக கூகிள் ப்ரவுசர்க்கு முடிவுரை? AI Browserஐ அறிமுகப்படுத்தும் Open AI! - சூதானமாக கூகிள் செய்த அப்டேட்!