கரும்புக்கு டன் ஒன்றுக்கு மூன்று ஆயிரம் ரூபாய் வழங்கக் கோரி சென்னையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சென்னையில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் மாநிலம் முழுவதிலிருந்தும் அனைத்து விவசாய சங்கத்தைச் சேர்ந்த 600க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக் கொண்டனர்.
போராட்டத்தில் கரும்பின் விலையை உயர்த்தக் கோரியும், வெட்டு கூலியை ஆலை நிர்வாகம் ஏற்க உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் இவர்கள் வலியுறுத்தினர்.
கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர்.