Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கச்சத்தீவை மீட்பதால் பயனில்லை- ஞானதேசிகன்

Webdunia
வியாழன், 9 பிப்ரவரி 2012 (00:28 IST)
கச்சத்தீவை மீட்க வேண்டும் என்ற கோரிக்கையால் எந்த பலனுமில்லை என்றார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன்.

திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சிக்கு கருத்து மாறுபாடு இல்லை. ஆனால், கச்சத்தீவை திரும்பப் பெறுவதால் எந்த பலனும் இல்லை.

கச்சத்தீவை சுற்றி மீன்வளம் இல்லை. இருப்பினும் இலங்கைக்கு அருகில் இருந்த தீவு அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி அந்தத் தீவை இலங்கைக்குக் கொடுக்கவில்லை என்றார் ஞானதேசிகன்.

மின் தட்டுப்பாடு குறித்து பேசியபோது, தொழில்துறையினர் மற்றும் பொதுமக்கள் மின் தட்டுப்பாடால் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர். கூடங்குளம் திட்டம் செயல்படத் தொடங்கினால் இந்தப் பிரச்னைக்கு ஓரளவு தீர்வு காணலாம்.

இதுகுறித்து மத்திய் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் ஞானதேசிகன்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments