ஒரே நாளில் 15,955 பேருக்கு அரசு வேலையும், தி.மு.க.வின் தேர்தல் வேகம்
சென்னை , சனி, 26 பிப்ரவரி 2011 (16:26 IST)
முதலமைச்சர் கருணாநிதி இன்று மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய திட்டங்களை தொடங்கி வைத்து செவிலியர் உள்பட 4,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். அதோடு சிறுபான்மை, சிறுபான்மை அல்லாத பள்ளிகளுக்கு 11,307 ஆசிரியர் பணியிடங்களும், 648 ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்பவும் அவர் ஆணை பிறப்பித்துள்ளார்.2006
ஆம் ஆண்டுக்கு பின் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 6 ஆயிரத்து 810 மருத்துவர்கள்; 7 ஆயிரத்து 242 செவிலியர்கள், 1,767 கிராம சுகாதார செவிலியர்கள், 659 மருந்தாளுநர்கள், மருத்துவம் சார்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக நியமனம் செய்துள்ளது தமிழக அரசு. இன்றும் அதே மக்கள் நல்வாழ்வுத்துறையில் 4 பேருக்கு நியமன ஆணையை வழங்கியுள்ளார் முதலமைச்சர் கருணாநிதி.அதோடு சென்னை தலைமைச் செயலகத்தில் மேலும் பல புதிய மருத்துவ நலத்திட்டங்களை முதலமைச்சர் கருணாநிதி இன்று தொடங்கி வைத்தார்.(
ஒன்று) சென்னை மண்டலம் சார்ந்த பகுதிகளில் கொடையாளர்களிடமிருந்து ரத்த சேகரிப்பு செய்திட, 1 கோடியே 39 இலட்ச ரூபாய்ச் செலவில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு மையம் வழங்கிய ரத்த சேமிப்பு ஊர்தியையும் அவர் தொடங்கி வைத்தார்.(
இரண்டு) அவசர மருத்துவ ஊர்தி இலவச சேவைத் திட்டத்தின்கீழ் தற்போது இயங்கிவரும் 385 மருத்துவ ஊர்திகளுடன் 5 கோடியே 96 இலட்ச ரூபாய்ச் செலவில் வாங்கப்பட்டுள்ள 31 அவசரகால மருத்துவ ஊர்தி 108 இலவசச் சேவை விரிவாக்கத் திட்டத்தை அவர் செயல்படுத்தினார்.(
மூன்று) இலவச அமரர் ஊர்தி சேவைத் திட்டம் இந்த ஆண்டில் செயல்படுத்தப்படுவதால் அத்திட்டத்தின் முதல் கட்டமாக 10 இலவச அமரர் ஊர்திகளையும் முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.
(
நான்கு) பிறந்து ஒரு வயது வரையுள்ள குழந்தைகளிடையே ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்கும் வகையில் கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துடன் இணைத்து 15 கோடி ரூபாய்ச் செலவிலான பச்சிளம் குழந்தைகளின் உயிர்காக்கும் அவசரகால சிகிச்சைத் திட்டத்தை தொடங்கி வைத்து, இத்திட்டத்திற்கான விளக்க அட்டைகளை 10 குழந்தைகளுக்கு கருணாநிதி வழங்கினார்.(
ஐந்து) 3ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஏறத்தாழ 55 இலட்சம் மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் 5 கோடியே 66 லட்சம் ரூபாய் செலவில் நடைமுறைப்படுத்தப்படும் - பள்ளி மாணவர்களுக்கான பல்பாதுகாப்புத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 5 பல் மருத்துவர்களுக்கு இத்திட்டத்திற்கான கருவிகளை முதலமைச்சர் வழங்கினார்.(
ஆறு) ஒவ்வொரு பள்ளியிலும் சுகாதாரக் குழுக்கள் அமைத்து, 32 லட்சத்து 6 ஆயிரம் மாணவ மாணவியர் பயனடையும் வகையில் 10 மாவட்டங்களில் 6 கோடியே 18 இலட்சம் ரூபாய்ச் செலவில் செயல்படுத்தப்படும், மேம்படுத்தப்பட்ட பள்ளி சுகாதாரத் திட்டத்தை முதலமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்து புதிய சுகாதார அட்டையை வழங்கி, திட்டக் கையேடு, குறுந்தகடுகளை வெளியிட்டார்.(
ஏழு) 69 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் நாமக்கல், பரமக்குடி, கமுதி, கீழக்கரை, இராமேசுவரம், திண்டிவனம், வாடிப்பட்டி, தொண்டாமுத்தூர், சூலூர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இராயப்பேட்டை மருத்துவ மனை, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சென்னை மனநலக் காப்பகம், ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை அறிஞர் அண்ணா அரசினர் இந்தியமுறை மருத்துவமனை ஆகியவற்றில் கட்டப்பட்டுள்ள 25 புதிய கட்டடங்களையும், சென்னை திருவொற்றியூரில் டைம்ஸ் பவுண்டேஷன் சார்பில் 5 கோடி ரூபாய்ச் செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன அரசு மருத்துவமனைக் கட்டடத்தையும் முதலமைச்சர் கருணாநிதி திறந்து வைத்தார்.