Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.நா.விசாரணதான் தேவை, அரசியல் தீர்வு அல்ல: சீமான்

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (20:32 IST)
FILE
ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீது இந்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஈழத் தமிழர்கள் எதிர்பார்ப்பது ஐ.நா.விசாரணையைத்தானே தவிர, அரசியல் தீர்வை அல்ல என்று கூறியுள்ளார்.

இலங்க ை நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கேயின் டெல்லி பயணம் குறித்த ு நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அறிக்கை.

இலங்க ை முன்னாள் பிரதமரும ், இந்நாள் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்கே இரண்ட ு நாள் பயணமாக டெல்லி வந்து விட்டுச் சென்றுள்ளார். இந்திய அயலுறவு அமைச்சர ் எஸ்.எம்.கிருஷ்ண ா, இந்திய அயலுறவுச் செயலர் நிருபமா ராவ் ஆகியோரை சந்தித்துப ் பேசியதாகக் கூறியுள்ள ரணில் விக்கிரமசிங்க ே, அவர்களுடன் என்ன பேசினார் என்ற விவரம ் எதையும் வெளியிடவில்லை. இந்திய அரசின் அழைப்பின் பேரில் டெல்லி வந்த ரணில ் விக்கிரமசிங்கேயுடன் தாங்கள் நடத்திய பேச்சுவார்த்தை என்ன என்பதை அயலுறவ ு அமைச்சரும் வெளிப்படுத்தவில்லை. ஈழத் தமிழர் பிரச்சனையில் எப்போதும ் கடைபிடித்துவரும் மூடு மந்திரச் செயல்பாட்டை இன்னமும் இந்திய அரசு தொடர்ந்த ு கொண்டுதான் இருக்கிறது.ஆனால ், நேற்று இரவு கொழும்பில் அங்குள்ள செய்தியாளர்களிடம ் பேசுகையில் விக்கிரமசிங்க ே, வெளியிட்ட விவரங்களைப் பார்க்கும்போத ு, இலங்கையில ் நடந்த போர் தொடர்பாக ஐ.நா.நிபுணர் குழு அளித்துள்ள அறிக்கை குறித்தும ், ஈழத ் தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வுத்திட்டம் குறித்தும் பேசியுள்ளார்கள்.

ஈழத ் தமிழர்களோ அல்லது அவர்களின் விடுதலைப் போராட்டத்தை முழு மனதுடன் ஆதரித்துவரும ் தமிழகத் தமிழர்களோ இந்திய அரசிடம் இருந்து எந்த அரசியல் தீர்வையும ் எதிர்பார்க்கவில்லை என்பதை நாம் தமிழர் கட்சி தெளிவுபடத் தெரிவித்துக்கொள்கிறது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக சிங்கள - பெளத்த இனவெறி சிறிலங்க அரசு நடத்தி ய தமிழின அழிப்புப் போருக்கு எல்லாவிதத்திலும் துணையாக நின்ற இந்திய அரச ு, ஈழத ் தமிழர்களின் அரசியல் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றித் தரும் என்பது ஏமாற்ற ு வேலையே.

உலகத் தமிழர்கள ், மற்றும் உலகெங்கும் வாழும் மனித நேயமிக்கவர்கள் அனைவரத ு எதிர்பார்ப்பும் கோரிக்கையும ், சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்து பன்னாட்ட ு நிபுணர் குழுவை அமைத்து ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என்பதேயாகும். ஐ.நா. பொதுச ் செயலர் பான் கி மூன் கூறியதைப்போல ், அங்கு நடந்த போர்க் குற்றம் உள்ளிட் ட மனிதாபிமான அத்துமீறல்களுக்குக் காரணமானவர்களை கண்டுபிடித்துப் பொறுப்பாக்க ி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்காமல ், சிறிலங்க அரசு முன்னெடுக்கும் எந் த அரசியல் இணக்கப்பாடும் அந்நாட்டில் அமைதியைய ோ, நீடித்த அரசியல் தீ்ர்வைய ோ உருவாக்காது என்பதை இந்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

இராஜீவ ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம் தீர்வாகாது

தமிழ்நாட்டுத ் தமிழர்களின் ஏகோபித்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்ட ு, 1987 ஆம் ஆண்டு தமிழினப ் பிரச்சனையில் தலையிட்ட இந்திய அரச ு, தமிழர்கள் ஏற்றுக்கொள்ளாத ஒரு தீர்வுத ் திட்டத்தை (இராஜீவ் - ஜெயவர்த்தனே ஒப்பந்தம்) அவர்களின் மீது திணித்தது. அத ு மட்டுமின்ற ி, அந்த ஒப்பந்தத்த ை, இந்தியாவின் மீது கொண்ட மதிப்பால் ஒப்புக்கொள்வதா க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் அறிவித்த பின்னரும ், நடுநிலையில் நின்ற ு ஒப்பந்தத்தை நிறைவேற்றாமல ், ஜெயவர்த்தனே அரசின் பேரினவாத நோக்கத்தை நிறைவேற் ற புலிகளுக்கு எதிராகவே திரும்பியது. அதன் விளைவாக ஏற்பட்ட மோதலில் 12,000த்திற்கும ் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர். சிறிலங் க இனவெறி அரசு முன்னெடுத்த தமிழினப் படுகொலைய ை, அமைதி காக்கச் சென்ற இந்திய அரசின ் பாதுகாப்புப் படைகள் தொடர்ந்தன. ஆ க, இந்தியாவின் தலையீடு ஈழத் தமிழரின் விடுதலைப ் போராட்டத்தை பல ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளியது.மட்டுமின்ற ி, தமிழின அழிப்ப ை திட்டமிட்டு நிறைவேற்றிவந்த சிறிலங்க அரசை பலவீனப்படுத்துவதற்கு பதிலாக அதன் நிலைய ை சர்வதேச அளவில் பலப்படுத்தியது.

இந் த நிலையில ், இலங்கை அரசுக்கும ், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே பேச்சுவார்த்த ை நடந்தபோது அதற்கு ஆதரவு மட்டும் தெரிவித்துவிட்டு ஒதுங்கி நின்ற இந்திய அரச ு, மகிந்த ராஜபகஷே அந்நாட்டு அதிபராக பொறுப்பேற்றப் பிறகு மீண்டும் அவரோடு இணைந்த ு இரகசியமாக திட்டம் தீட்டி தமிழினத்தின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை அழிக் க முற்பட்டது என்பதைத்தான் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான விக்கிலீக்ஸ் இணையத்தளம ் வெளியிட்ட அமெரிக்க ஆவணத்தில் இருந்து தெரியவந்துள்ளது.

ராஜபக் ச அரசு திட்டமிட்டு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு எல்லா விதத்திலும் உதவ ி, தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்த முயன்ற பன்னாட்டு அரசுகளின் அழுத்தத்தை தடுத்த ு நிறுத்த ி, ஒன்றரை இலட்சம் தமிழர்கள் படுகொலைக்கு முழுமையாகத் துணை நின்றது இந்தி ய அரசு. போருக்குப் பின் தமிழர்களின் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்பது குறித்த ு எதையும் பேசாமல ், சிறிலங்க அரசுடன் வணிக ஒப்பந்தங்களைப் போடுவதற்கு மட்டுமே முழ ு முயற்சி மேற்கொண்டுவந்த இந்திய அரச ு, இன்று ஐ.நா.நிபுணர் குழு அறிக்கை அளித்ததால ் உருவான நெருக்கடியில் இருந்த தன்னையும ், சிறிலங்க அரசையும் காப்பாற்றிக்கொள் ள மீண்டும் அரசியல் தீர்வு எனும் ஏமாற்று ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது. அந் த சூழ்ச்சியை நிறைவேற்றவ ே, முதலில் அந்நாட்டு அயலுறவு அமைச்சர் ஜி.எல்.பெய்ரீஸ் உடன ் பேச்சுவார்த்தை நடத்தியது. இப்போது அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவரான ரணில ் விக்கிரமசிங்கேயை அழைத்துப் பேசியுள்ளது.

ஏதாவது ஒரு தீர்வுத் திட்டத்தை தமிழர்கள ் மீது திணித்துவிட்ட ு, தாங்கள் இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு கண்டுவிட்டதா க உலகை ஏமாற்ற நினைக்கிறது டெல்லி. அவ்வாறு செய்வதன் மூலம ், ஐ.நா.நிபுணர் குழ ு அறிக்கைய ை, ஒரு தேவையற்ற தலையீடாக காட்ட முற்படுகிறது. இதன் மூலம் ஒரே கல்லில ் இரண்டு மாங்காய் அடித்துவிட திட்டமிடுகிறது. ஆனால் தமிழர்கள் ஒன்றும் ஏதும் புரியா த ஏமாளிகள் என்று எண்ணுவதை புதுடெல்லி நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இன்றுள் ள நிலையில ், தங்களுக்கு எதிராக நடத்தப்பட்ட போரில் இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம ் பெறாமல ், எந்த அரசியல் தீர்வு குறித்தும் சிறிலங்க இனவெறி அரசுடனோ அல்லது அதற்க ு துணைபோன இந்திய அரசுடனோ உலகத் தமிழினம் எதையும் எதிர்பார்க்கவில்லை என்பதை டெல்ல ி புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கு எதிராக டெல்லி கடைபிடித்துவரும் இலங்க ை ஆதரவுக் கொள்கைக்கு எதிராகத்தான் நடந்த முடிந்த தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில ் காங்கிரஸ் கட்சிக்கும ், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் அளித்த படுதோல்வியின் மூலம ் தமிழக மக்கள் பாடம் புகட்டியுள்ளார்கள் என்பதை டெல்லி காங்கிரஸ் அரச ு மறந்துவிடக்கூடாது.

எனவ ே, இந்தியாவின் இறையாண்மையை மதித்து ஜனநாயகப் பூர்வமாக தங்கள ் தீர்ப்பை அளித்த தமிழ்நாட்டு மக்களை டெல்லி காங்கிரஸ் அரசு மதிப்பதாக இருந்தால ், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையின் மீதான தனது நிலைப்பாடு என் ன? ஆதரிக்கிறதா அல்லத ு எதிர்க்கிறத ா? என்பதை முதலில் தெளிவுபடுத்த வேண்டும். தமிழர்களுக்குத் தேவ ை பன்னாட்டு விசாரணைய ே, இந்தியாவின் அரசியல் தீர்வல்ல என்பதைத் தெரிவித்துக ் கொள்கிறேன்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments