சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடலுக்கான 2 கிராமி விருதுகளை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தந்தி மூலம் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ் மிக்க கிராமி விருதுகளை பெற நீங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இசைத்துறையின் மிக உயர்ந்த விருதை தமிழகத்தின் புதல்வனான நீங்கள் பெற்றிருக்கும் மகத்தான நிகழ்வை நினைத்து தமிழகம் பெருமிதம் கொள்கிறது.
இசைத்துறையில் சிகரத்தை தொட்டு இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.