அரவாணிகள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட ஏப்ரல் 15 ஆம் நாள் திருநங்கையர் தினமாக கடைப்பிடிக்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்திலுள்ள அரவாணிகளுக்கு முழுமையான சமூகப் பாதுகாப்பை அளிப்பதற்குத் தேவையான திட்டங்களை வகுத்துச் சிறப்பான முறையில் செயல்படுத்தவதற்காக அரவாணிகள் நல வாரியம் முதலமைச்சர் கருணாநிதியால், 15.4.2008 அன்று ஏற்படுத்தப்பட்டது.
அரவாணிகளைச் சிறப்பிக்கும் வகையில், இந்த ஆணை வெளியிடப்பட்ட ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாளை திருநங்கையர் தினம் என அறிவிக்க வேண்டுமென தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.
அக்கோரிக்கையினை மிகுந்த பரிவோடு பரிசீலனை செய்து, ஆண்டுதோறும் ஏப்ரல் திங்கள் 15 ஆம் நாள் திருநங்கையர் தினம் ஆகக் கடைப்பிடிக்கப்படுமென முதலமைச்சர் கருணாநிதி இன்று ஆணை பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.