Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எண்ணூரில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது

எண்ணூரில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது
, புதன், 28 டிசம்பர் 2011 (13:04 IST)
திருவொற்றியூர் மற்றும் எண்ணூர் பகுதிகளில் இன்றும் கடல் சீற்றம் காணப்பட்டது. இதனால் தெருக்களில் கடல்நீர் புகுந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறலாம் என்றும், நெல்லூர் பகுதியில் அது கரையை கடக்கும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் கடல் சீற்றம் ஏற்பட்டது.

இதன் காரணமாக கடல் அரிப்பை தடுக்க போடப்பட்ட பாறாங்கற்களையும் தாண்டி ராட்சத அலைகள் கரையின் அருகே இருக்கும் மீனவர் குடிசைகள் மற்றும் வீடுகளில் புகுந்தது.

Share this Story:

Follow Webdunia tamil