பூந்தமல்லி சிறப்பு முகாமில் வழக்கேதுமின்றி அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள் 4 பேரையும் உடனடியாக விடுவிக்குமாறு நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், “செங்கல்பட்ட ு முகாமில் 23 ஈழத் தமிழர்களும் பூந்தமல்லியில் உள்ள சிறப்பு முகாமில் 4 ஈழத் தமிழர்களும் தமிழக அரசால் அடைத்த ு வைக்கப் பட்டுள்ளனர். மேற்கண்ட முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பவர்கள் குற் ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டும ், உரிய முறையில் பிணை பெற்றும் இருக்கின்றனர். ஆனால் தமிழக அரசு அவர்களை சட்டத்திற்குப் புறம்பாக சிறப்பு முகாம் என்ற பெயரில ் அங்கு அடைத்து வைத்துள்ளது.
இந்நிலையில ் கங்காதரன ், சந்திரகுமார ், அமலன ், ஜெயமோகன் ஆகிய 4 பேரும் தங்களை விடுவிக்கக் கோர ி பூந்தமல்லி முகாமில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். ஆனால ் இவர்களின் கூக்குரல் இதுவரை தமிழக அரசுக்கு எட்டவில்லை அல்லது எட்டினாலும் ஒன்றும ே நடக்காதது போல கள்ள மவுனம் காத்து வருகிறது.
நாட்டில் நடப்பது தொடர் அரசு தான ்; காபந்து அரசு அல்ல. இது உலகுக்குத் தெரியும் என பத்திரிக்கைகளில் பக்கம் பக்கமா க அறிக்கை எழுதி நான் தான் இப்பொழுதும் முதல்வர் என தினமும் மக்களுக்கு நினைவூட்டும ் முதல்வர ், மக்களின் மீதான உண்மையான அக்கறையை செயல்பாட்டில் காட் ட வேண்டும். அதனை விடுத்து நாட்டில் மின்வெட்ட ு, விலைவாசி உயர்வு என ஆயிரக்கணக்கா ன மக்கள் பிரச்சனைகள் இருந்தாலும் அதில் கவனம் செலுத்தாமல் விரயமாக ஆயிரம் கோட ி மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகத்தில் அமர்ந்து மீன்களுக்க ு பொறி பொட்டுக் கொண்டிருக்கிறார். மீன்களின் உயிரின் மீது காட்டும் அக்கறையில ் சிறிதளவாவது நம் அனைவரின் கண் முன்னும் சாகக் கிடக்கும் எம் சொந்தங்களின் மீத ு காட்ட வேண்டும். ஆகவே உடனே தமிழக அரசு உண்ணாவிரதம் இருக்கும் பூந்தமல்லி மற்றும ் செங்கல்பட்டு அகதிகளை விடுதலை செய்ய வேண்டும ்” என்று சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.