Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஈரோடு மாவட்டத்தில் விடிய, விடிய மழை

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

Webdunia
செவ்வாய், 19 பிப்ரவரி 2013 (14:22 IST)
ஈரோடு மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு விடிய, விடிய கொட்டிய மழையினால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மழையில்லாத காரணத்தால் கடுமையான வெப்பம் வீசி வந்தது. இதன் காரணமாக விவசாய கிணறுகளில் தண்ணீர் கீழ்நோக்கி சென்றதால் கடும் வறட்சி ஏற்பட்டது.

விவசாயிகள் குடிநீருக்கே தவிக்கும் நிலை ஏற்பட்டதால் தங்கள் கால்நடைகளை குறைந்த விலைக்கு கர்நாடக மாநில வியாபாரிகளுக்கு விற்பனை செய்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு லேசாக மாவட்டத்தில் ஆங்காங்கே மழை பெய்தது. இந்த நிலையில் நேற்‌றிரவு இடி, மின்னலுடன் ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழையின் காரணமாக கடும் வெப்பம் குறைந்து தற்போது குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments