அணுஉலை எதிர்ப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் 14 பேர் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தவர்களுக்கும், இந்து முன்னணியினருக்கும் மோதல் ஏற்பட்டது.
இதில் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தாக்கப்பட்டனர். இந்த தொடர்பாக இந்து முன்னணியை சேர்ந்த 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர்கள் அங்கு பிரச்னை எதுவும் ஏற்படாமல் இருக்கும்பொருட்டு தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.