இலங்கை அரசால் திருப்பி அனுப்பப்பட்ட நிகழ்வை கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் பங்கேற்க கொழும்பு சென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை வல்வெட்டித்துறைக்கு அனுப்ப மறுத்து இலங்கை அதிகாரிகள் திருப்பி அனுப்பி விட்டனர்.
இதைக்கண்டித்து சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை திருமாவளவன் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து திருமாவளவன், சட்டமன்ற உறுப்பினர் ரவிக்குமார் உள்பட அக்கட்சியை சேர்ந்த 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் ஒரு மணி நேரம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.