சென்னை திரிசூலம் அருகே இரயில் மோதி தாய் -மகள் இருவரும் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
திரிசூலம் குவாரியில் கல் உடைக்கும் தொழில் செய்து வந்த தாய் மாடச்சி, தாய் செல்லம்மாள் இருவரும் இன்று காலை தண்டவாளத்தை கடக்க முயன்றனர்.
அப்போது சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் நோக்கி வந்த மின்சாரம் இரயில் இவர்கள் மீது மோதியது. இதில் இருவரும் உடல் நசுங்கி பலியானார்கள்.
இவர்களது உடலை இரயில்வே காவல்துறையினர் கைப்பற்றி பிரசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.