Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இரட்டைக்கொலை: கள்ளக்காதலியுடன் காதலனும் பலி!

இரட்டைக்கொலை: கள்ளக்காதலியுடன் காதலனும் பலி!
, வெள்ளி, 22 மார்ச் 2013 (20:45 IST)
FILE
நாகர் கோவிலில் கள்ளகாதல் ஜோடி கொடூரமாக கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நண்பரே வீட்டில் தங்கியிருந்து கொலையை அரங்கேற்றிய பயங்கரம் நிகழ்ந்துள்ளது

மசாலா பொருட்கள் விற்பனை செய்து வந்தவர் மாகின்ஷா, இவருக்கு வயது 35. இவருக்கு திருமணமாக 2 குழந்தைகள் உள்ளனர். மனைவியுடன் கருத்து வேறுபாடு காரண்மாக தனியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தனது நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த ராணி என்ற பெண்ணுடன் இவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் அமோகமாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

ஆனால் மாகின்ஷா குடும்பத்தினர் இதனை கண்டித்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் மாகின்ஷா, ராணி மற்றும் வேலைக்காரர் இருந்துள்ளனர்.

மாகின்ஷாவின் நண்பர் ஒருவரும் கூட இருந்துள்ளார். நள்ளிரவு 12 மணியளவில் நண்பர் ரிபாயி கீழே இறங்கி வந்ததாக தெரிகிறது.

சிறிது நேரத்திற்கெல்லாம் மாகின்ஷாவும், ராணியும் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். வேலைக்காரர் செல்லதுரை இதனை பார்த்துள்ளார்.

இருவரையும் கொலைக்கும்பல் முதுகில் சரமாரியாக குத்தியுள்ளது தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணையில் உடன் தங்கியிருந்த ரிபாயி மற்றும் மேலும் 3 பேர் சேர்ந்து இந்தக் கொடூரச் செயலை செய்தது தெரியவந்தது. இதில் தம்பி அனீஷ் என்பவரும் ஈடுபட்டுள்ளதாக அவர் கைது செய்யப்பட்டார்.

மீது 3 பேருக்கு வலை வீசப்பட்டுள்ளது. பண விஷயம்தான் கொலைக்குக் காரணம் என்று தெரிகிறது.

Share this Story:

Follow Webdunia tamil