நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு மிரட்டில் கடிதம் வந்துள்ளதால் அவருக்கு பாதுகாப்பு கேட்டு காவல்துறை ஆணையரிடம் அதன் நிர்வாகிகள் மனு கொடுத்துள்ளனர்.
புதுச்சேரியில் இருந்து வந்துள்ள அந்த கடிதத்தில், இயக்கத்தை கலைக்குமாறு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக நாம் தமிழர் நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
நாம் தமிழர் இயக்கத்தை சேர்ந்த முத்துக்குமார் அண்மையில் அடையாளம் தெரியாத நபர்களால் படுகொலை செய்யப்பட்டார்.
இவர்களால்தான் இயக்குனர் சீமானுக்கு மிரட்டல் வந்துள்ளதாக காவல்துறை ஆணையரிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர்.