நடைபெற உள்ள திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆதரவு அளிக்கும் என்று அக்கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர், வந்தவாசி சட்டமன்ற இடைத்தேர்தலில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிலை குறித்து ஆலோசிக்க, நேற்றைய முன்தினம் சென்னை, தியாகராய நகரில் உள்ள தலைமை அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகளில் பெரும்பான்மையினர், தமிழக ஆளுங்கட்சி வேட்பாளர்களை ஆதரிக்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் தி.மு.க. வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுகிறேன் என்று சரத்குமார் கூறியுள்ளார்.