Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசையைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் -இளையராஜா

Webdunia
வியாழன், 18 ஜூலை 2013 (15:51 IST)
FILE
பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக்கவேண்டும் என்று இசை ஞானி இளையராஜா வலியுறுத்தியுள்ளார்.

மதுரை தியாகராஜர் கல்லூரியில் தமிழிசை ஆய்வு மையம் துவக்க விழா நேற்று நடந்தது, இதில் உரையாற்றிய இளையராஜா இவ்வாறு கூறியுள்ளார்.

இந்த மையத்தை திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா துவக்கி வைத்துப் பேசியதாவது:

FILE
மதுரையில் தெப்பக்குளத்தில் அமர்ந்து பலமுறை பாடியிருக்கிறேன். இசைச் சொற்களை பயன்பாட்டில் முக்கியத்துவம் உள்ளது. மேற்கத்திய இசை அனைத்தும் இத்தாலிய மொழியில் இருக்கும்.

ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இசைச் சொற்கள் இருந்திருக்க வேண்டும். இசை இறைவனுடையது. தமிழிசை பற்றி எனக்கு தெரியாது. அது மட்டுமே எனக்குள் குற்ற உணர்வாக உள்ளது.

பள்ளிகளில் இசையை கட்டாய பாடமாக்க அரசு எப்போது நடவடிக்கை எடுக்கிறதோ, அப்போது தான் இசை உயிர்பெறும். இசையை கட்டாய பாடமாக்கினால் நாட்டில் வன்முறை குறையும்.

பஸ்சில் பயணம் செய்யும் போது ஒலிக்கும் பாடல், பயணிகளை தூங்க வைக்கிறது. அதே பாடல், டிரைவரை விழித்திருக்கச் செய்கிறது. ஒரு பாடலை கேட்டால் நமது மனம் ஒரு நிலையில் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments