வேலூர் மாவட்டம், ஆம்பூரில் நேற்றிவு பெய்த பலத்த மழைக்கு 5 பேர் பலியாகியுள்ளனர். அங்குள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளத்தில் 20 பேர் அடித்துச் செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஆம்பூர் பகுதியில் நேற்றிரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் அங்குள்ள ஆனைமேடு அணை நிரம்பி வழிந்தது.
இதனால் கரை புரண்டு ஓடிய காட்டாற்று வெள்ளம் காணாறை ஒட்டியிருந்த குடிசைகளை அடித்து சென்றது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் மாயமானார்கள்.
இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இறந்தவர்களின் பெயர் முனி, அவரது மகள் ஜானு (10), மகன் அசோக் (8), உபயதுல்லா (16), அவரது மகன் ஜலீல் என்று தெரியவந்துள்ளது.
மாயமானவர்களின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்புதுறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.