Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவில் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை தமிழக முதல்வர் காப்பாற்ற வேண்டும் – சீமான்

Webdunia
வியாழன், 28 ஜூலை 2011 (16:24 IST)
FILE
தமிழ்நாட்டின ் வத்தலகுண்டு முகாமில் இருந்து கனடா நாட்டுக்குச் செல்வதற்கான முயற்சியில ் ஈடுபட்டபோது ஆந்திர மாநில காவல்துனையினரால ் கைது செய்யப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகள ை துன்புறுத்தாமல் பாதுகாப்பாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வர உத்தரவிட வேண்டும் என்ற ு தமிழக முதல்வருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வத்தலகுண்டு அகதிகள் முகாமில் இருந்து 50க்கும் மேற்பட் ட பெண்களும ், 20 க்கும் மேற்பட்ட சிறுவர்கள் உட்பட 180 ஈழத் தமிழ் அகதிகள ், தங்கள ் பிள்ளைகளின் வளமான எதிர்காலத்திற்காக கனடா செல்ல முயற்சித்து ஆந்திராவிற்குத ் தப்பிச் சென்ற போது அம்மாநில காவல் துறையினரால் துனி என்ற இடத்தில் கைத ு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள ் கைது செய்யப்பட்டுள்ளதை ஆந்திர காவல் துறையினர் தமிழக காவல் துறைக்கு தகவல ் அளித்ததைத் தொடர்ந்த ு, அவர்களை விசாரிக்கச் சென்ற தமிழக காவல் துறையின் சிறப்புப ் பிரிவு புலனாய்வு அதிகாரிகள் (சிபிசிஐடி) அவர்களை அடித்தும ், உதைத்தும ், தகா த வார்த்தைகளால் திட்டியும் துன்புறுத்தி வருவதாக தகவல் வந்துள்ளது.

ஈழத ் தமிழ் அகதிகள ், தமிழ்நாட்டில் மட்டுமின்ற ி, இலங்கையில் இருந்தும ், தங்களுடை ய பாதுகாப்ப ு, தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கருத ி, கனட ா, ஆஸ்ட்ரேலியா உள்ளிட் ட நாடுகளுக்குச் செல்ல முயற்சிக்கின்றனர். அப்படிச் சென்று சேர்ந்தவர்கள்தான் ப ல இலட்சக்கணக்கான புலம் பெயர்ந்த தமிழர்களாக அந்நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால ், இப்படி சட்டப்படியான வழிகளில் செல்ல முடியாதவர்கள ், ஏதாவது ஒரு கடற்கலனைப ் பிடித்து தப்பி செல்ல முயற்சிக்கின்றனர். சர்வதேச கடற்பரப்பிலோ அல்லது இப்படி அந் த நாட்டிற்குள்ளேயோ பிடிபடுகின்றனர். ஆனால ், அவர்கள் அவ்வாறு தப்பிச் செல் ல முற்பட்டதற்காக எதற்காக துன்புறுத்த வேண்டும ்?

பாதுகாப்பா ன வாழ்வையும ், உறுதியான எதிர்காலத்தையும் நாடுவது மனித இயல்பு. அவர்கள் எந் த நாட்டிற்கு அகதிகளாகச் செல்ல விரும்புகின்றனர ோ, அதனை அந்த நாடே கூட மறுக்கக் கூடாத ு என்று ஐ.நா.வின் அகதிகள் பிரகடனம் கூறுகிறது. அவர்களின் வாழ்வுரிமைய ை, அகதிகளாகச ் சென்று மற்றொரு நாட்டில் வாழும் உரிமையை ஐ.நா.வின் பன்னாட்டு மனித உரிமைப் பிரகடனம ் உறுதி செய்துள்ளது. ஆனால ், உலகம் மதிக்கும் இந்தப் பிரகடனங்களை இந்தியா உள்ளிட் ட ஆசிய நாடுகள் எதுவும் மதிப்பதில்லை என்பதே வருத்தத்திற்குரிய நிலையாகும்.

கால ் நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாட்டின் முகாம்களில் இருந்துவரும் ஈழத் தமிழ ் அகதிகளின் வாழ்வு மனிதப் பேரவலம் என்று கூறுகின்ற அளவிற்குத்தான் இருந்த ு வந்துள்ளது.

தமிழகத்தின ் முதல்வராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஜெயலலிதா, அகதிகள் வாழ்வையும ், முகாம்களின் சூழலையும் மேம்படுத்த ஜூன் மாதம் 7ஆம் தேதி தமிழக அரசின ் மறுவாழ்வுத்துறையின் வாயிலாக விரிவானதொரு உத்தரவைப் பிறப்பித்துள் ள நிலையில ், தங்களுடைய பிள்ளைகளுக்கு வளமா ன, பாதுகாப்பான எதிர்காலத்தை உறுதி செய்ய - அவர்களுக்கு புலப்படும் வழியில் வேறு ஒரு நாட்டிற்கு சென்றிட முயற்சிக்கின்றனர். ஆனால் இதனை ஒரு பெரும் குற்றச்செயலாக இந்நாட்டில் பாவிக்கப்படுவது ஏன் என்ற ு புரியவில்லை. உலகின் வேறெந்த ஒரு நாட்டிலும் அகதிகளை இப்படிக் கேவலமாக நடத்துவதும ் இல்ல ை, துன்புறுத்துவதும் இல்லை.

ஆகவ ே இப்பிரச்சனையில் தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்ட ு, அவர்களை விடுவித்து மனித நேயத்துடன ் தமிழகத்திற்கு அழைத்து வருமாறு நாம் தமிழர் கட்சி வேண்டுகோள ் விடுக்கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments