தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன.
இவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு பொது மாறுதல் வழங்க கலந்தாய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கான கலந்தாய்வு வரும் 25 ஆம் தேதி ட ி. ப ி. ஐ வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 9 பேர், முதுநிலை விரிவுரையாளர்கள் 23 பேர், விரிவுரையாளர்கள் 49 பேர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.
காலி பணியிட விவரங்கள் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவல் தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.