Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்களுக்கு 25ஆ‌ம் தே‌தி மாறுதல் கல‌ந்தா‌ய்வு

ஆசிரியர் பயிற்சி பள்ளி விரிவுரையாளர்களுக்கு 25ஆ‌ம் தே‌தி மாறுதல் கல‌ந்தா‌ய்வு
சென்னை , வெள்ளி, 24 ஜூலை 2009 (11:02 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல் உ‌ள்ள ஆ‌சி‌‌ரிய‌ர் ப‌யி‌ற்‌‌சி ப‌ள்‌ளி ‌வி‌ரிவுரையாள‌ர்களு‌க்கு வரு‌ம் 25ஆ‌ம் தே‌தி செ‌ன்னை டி.‌பி.ஐ. வளாக‌த்‌தி‌ல் மாறுத‌ல் க‌ல‌ந்தா‌ய்வு நடைபெறு‌கிறது எ‌ன்று த‌‌மிழக அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

தமிழகத்தில் 30 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும், 9 அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் உள்ளன.

இவற்றில் பணியாற்றும் முதல்வர்கள், முதுநிலை விரிவுரையாளர்கள், விரிவுரையாளர்கள், இளநிலை விரிவுரையாளர்கள் ஆகியோருக்கு பொது மாறுதல் வழங்க கல‌ந்தா‌ய்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான கல‌ந்தா‌‌ய்வு வரு‌ம் 25ஆம் தேதி டி.ி.ஐ வளாகத்தில் நடக்கிறது. மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்கள் 9 பேர், முதுநிலை விரிவுரையாளர்கள் 23 பேர், விரிவுரையாளர்கள் 49 பேர் மாறுதல் கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

காலி பணியிட விவரங்கள் www.pallikalvi.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவல் த‌மிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil