Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆசிட் வீச்சில் பலியான வித்யாவின் கண்கள் தானம்!

Webdunia
ஞாயிறு, 24 பிப்ரவரி 2013 (13:44 IST)
FILE
சென்னையில் இன்று ஆசிட் வீச்சுக் கொடுமைக்கு இரையான மற்றொரு பெண் வித்யாவின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளனர்.

வித்யாவின் குடும்பம் ஏழ்மையானது. தந்தையை சிறு வயதிலேயே இழந்து விட்டதால் தாய் சரஸ்வதி கூலி வேலை செய்தும், வீட்டு வேலைகள் செய்தும் மகள், மகனை காப்பாற்றினார்.

குடும்ப சூழல் காரணமாக பிளஸ்௨ வரை மட்டுமே படித்தார். மேற்கொண்டு படிக்க வசதி இல்லாததால் சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பிரவுசிங் செண்டரில் வேலை செய்து வந்தார் வித்யா.

அண்ணன் விஜய்யும் குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்கு போனார். வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறார்கள்.

கண்தானம் செய்வதின் அவசியத்தை உணர்ந்த அவர் தனது கண்களையும் தானம் செய்ய விரும்புவதாக கூறிவந்தார். அவர் விருப்பப்படியே வித்யா இறந்ததும் அவரது கண்கள் எழும்பூர் கண் மருத்துவ மனைக்கு தானமாக வழங்கப்பட்டது.

தாய் சரஸ்வதி கூறும்போது, கணவரை இழந்த நான், மகன், மகள் என 3 பேரும் வேலைக்கு போய்தான் குடும்பம் நடத்தி வந்தோம். என் மகளை இழந்த வேதனையில் எங்களால் வேலைக்கு செல்ல இயல வில்லை. நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி தவிக்கிறோம் என்றார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments