விழுப்புரம் மாவட்ட அ.இ.அ.தி.மு.க அவைத் தலைவரும், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான ஹீராசந்த் மரணமடைந்தார்.
68 வயதான இவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், திண்டிவனம் நகர்மன்ற தலைவராக நான்கு முறையும், ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்ட அ.இ.அ.தி.மு.க. செயலராகவும் இருந்தவர்.
கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியின்றி இருந்து வந்த ஹீராசந்த், நேற்று மாலை திண்டிவனம் சந்தை மேட்டுப் பகுதியில் உள்ள தனது வீட்டில் அவர் மரணமடைந்தார்.
இவரது உடலுக்கு அ.இ.அ.தி.மு.க. பிரமுகர்கள், பல்வேறு கட்சியினர், பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். இன்று மாலை திண்டிவனம் நகராட்சி இடுகாட்டில் அடக்கம் செய்யப்படுகிறது.
ஹீராசந்த்துக்கு சுசீலா தேவி என்ற மனைவியும், பப்லாசா, ஜீன்ராஜ், நவீன்குமார் ஆகிய மகன்கள் உள்ளனர்.