சென்னை: சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு சென்ற அனைத்து இரயில்களிலும் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று திடீரென அதிரடி சோதனை நடத்தினர்.
நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஒதுக்கீட்டுக்கான டிக்கெட்டுகளை ஏஜெண்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரையடுத்து சி.பி.ஐ இந்த அதிரடி சோதனை நடவடிக்கையை இன்று மேற்கொண்டது.
சேரன், பாண்டின், மலைக்கோட்டை உள்பட 7 இரயில்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அவசர ஒதுக்கீடுகள் அனைத்தும் தலா ரூ.300 விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் பயனாளிகளுக்கு அழுக்கு போர்வை, தலையணை கொடுத்து பணம் வசூலித்தது தெரியவந்தது.
இந்த முறைகேடுகளுக்கு துணைபோன தெற்கு இரயில்வே அதிகாரிகளிடம் சி.பி.ஐ அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.