Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவதூறு வழக்கில் ஜெ. நேரில் ஆஜராக தடை: உயர் நீதிமன்றம்

Webdunia
திங்கள், 1 ஜூன் 2009 (17:16 IST)
அவதூறு வழக்கு தொடர்பாக, நீதிமன்றத்தில் நேரில் ஆ ஜர ாவதிலிருந்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு சமீபத்தில் நிவாரண உதவி திரட்டியது. இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறைப்படி போய் சேருவதில்லை என்ற ரீதியில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஓர் கருத்தை தெரிவித்திருந்தார்.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் ஜெயலலிதா மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் ஜூன் 2ம் தேதி (நாளை) ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவுக்கு தடை விதிக் கக ் கோரியும், வழக்கு விசாரணையை நிறுத்தக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி ராமநாதன், ஜெயலலிதா நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு 6 வார காலம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதுதொடர்பாக அரசு பொதுத்துறை செயலாளர் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments