Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசுக்கு நெருக்கடி கொடுக்க மாட்டோம்: ராமதாஸ்

Webdunia
புதன், 4 ஜூலை 2007 (20:56 IST)
தமிழக அரசுக்கு எந்த வகையிலும் நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்றும், தங்கள் செயல்பாடுகள் நெருக்கடி கொடுக்கும் வகையில் அமையாது என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டினார். இதற்கு கண்டனம் தெரிவித்து முதலமைச்சர் கருணாநிதி நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவ ராமதாஸ், தி.மு.க அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளித்து வருவதாகவும், 5 ஆண்டுகள் இது தொடரும் என்றும் கூறினார்.

கூட்டணி கட்சிகள் கூட்டம் நடைபெறாததால் தங்களின் பிரச்சனையை பற்றி ஆலோசிக்க முடியவில்லை என்று தெரிவித்த அவர், தற்போது கூட்டுறவு தேர்தல் குறித்து கூட இதுவரை தங்களுடன் எந்த வித ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றார்.

தி.மு.க உடன் நட்பு முறையில் கூட்டணி வைத்திருப்பதாக அவர் கூறினார். தமிழக அரசுக்கு இனி நெருக்கடி கொடுக்க மாட்டோம் என்றும், தங்கள் நடவடிக்கை நெருக்கடி கொடுக்கும் வகையில் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments