Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா ஸ்கூல் ஆல் பாசா? கருணா‌நி‌தி ‌‌‌மீது வழ‌க்கு

Webdunia
வியாழன், 21 பிப்ரவரி 2013 (16:26 IST)
FILE
வார ப‌த்‌தி‌ரிகை‌யி‌ல் 'அம்மா ஸ்கூல் ஆல் பாசா?' எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் வெ‌ளியான வாச‌கத்தை கு‌றி‌த்து முரசொ‌லி‌யி‌ல் க‌ட்டுரை எழு‌திய ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ‌மீது த‌மிழக அரசு அவதூறு வழ‌க்கு தொட‌ர்‌ந்து‌ள்ளது.

ஆனந்த விகடன் பத்திரிகையில் 22.8.2012 தேதியிட்ட இதழில், அம்மா ஸ்கூல் ஆல் பாசா? என்ற தலைப்பில் செய்தி வெளியானது. அதில், வீட்டு வசதி வைத்தியலிங்கத்தின் பொலிடிக்கல் பி.ஏ.வாக இருக்கும் காந்திதான் அங்கு எல்லாம். அதை விட காந்தியின் மச்சான் முத்துகுமார் ஆலோசனைப்படிதான் எல்லாம் நடக்கிறது' என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த வாசகத்தை குறிப்பிட்டு, 23.8.2012 தேதியிட்ட முரசொலி பத்திரிகையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கேள்வி-பதில் கட்டுரையில் வெளியாகி இருந்தது.

இது, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆர்.வைத்தியலிங்கத்துக்கு சமுதாயத்தில் இருந்த நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று கூறி சென்னை மாவட்ட முதன்மை அம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல், தி.மு.க. தலைவர் கருணாநிதி, முரசொலி பத்திரிகை ஆசிரியர் செல்வம் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை அமைச்சர் சார்பில் மாநகர அரசு வ‌ழ‌க்க‌றிஞ‌ர் எம்.எல்.ஜெகன் இன்று தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்.! நயினார் நாகேந்திரனுக்கு முக்கிய சம்மன்.!

ராமர் கோயில் விழாவை புறக்கணித்த காங்கிரஸை மக்கள் புறக்கணிக்க வேண்டும்: பிரதமர் மோடி

பணி செய்யவிடாமல் தடுத்ததாக வழக்கு. எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன் ஜாமீன்..!

பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!

Show comments