Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்மா உணவகம்; குஷ்பு இட்லி போடுங்களேன்!

Webdunia
ஞாயிறு, 2 ஜூன் 2013 (15:16 IST)
அம்மா உணவகங்களில் குஷ்பு இட்லி போட்டால் சாப்பிடுபவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் யோசனை தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி நினைவு தினம் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,

நம் இளம் தலைவர் ராஜீவ் காந்தியால் தான் இன்று கம்ப்யூட்டரையும், செல்போன்களையும் ஏழை, எளியவர்கள் கூட பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செய்த திட்டங்களை எல்லாம் தங்கள் திட்டம் என மாநில அரசுகள் சொல்லிக் கொள்வது தான் இவர்களின் சாதனை.

மேலும் அம்மா உணவகத்தில், இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நீங்கள் 1 ரூபாய்க்குப் போடுகின்ற இட்லியை கொஞ்சம் பெரிதாக குஷ்பு இட்லி போல போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். குஷ்பு தி.மு.க.வுக்குப் போய்விட்டதால், இட்லிக்கு குஷ்பு பெயரை வைக்க முடியாது. ஆனால், ‘அந்த’ சைஸில் இட்லி போட்டால், சாப்பிடுகிறவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

என்று ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments