ராஜீவ்காந்தி நினைவு தினம் மற்றும் மத்திய அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று மதுரையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில்,
நம் இளம் தலைவர் ராஜீவ் காந்தியால் தான் இன்று கம்ப்யூட்டரையும், செல்போன்களையும் ஏழை, எளியவர்கள் கூட பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், மத்திய அரசு செய்த திட்டங்களை எல்லாம் தங்கள் திட்டம் என மாநில அரசுகள் சொல்லிக் கொள்வது தான் இவர்களின் சாதனை.
மேலும் அம்மா உணவகத்தில், இட்லி, சாம்பார் சாதம், தயிர் சாதம் கொடுப்பது நல்ல விஷயம் தான். ஆனால், நீங்கள் 1 ரூபாய்க்குப் போடுகின்ற இட்லியை கொஞ்சம் பெரிதாக குஷ்பு இட்லி போல போட்டால் இன்னும் நன்றாக இருக்கும். குஷ்பு தி.மு.க.வுக்குப் போய்விட்டதால், இட்லிக்கு குஷ்பு பெயரை வைக்க முடியாது. ஆனால், ‘அந்த’ சைஸில் இட்லி போட்டால், சாப்பிடுகிறவர்கள் சந்தோஷப்படுவார்கள்.