பேரறிஞர் அண்ணாவின் 101-வது பிறந்த நாளையொட்டி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு முதலமைச்சர் கருணாநிதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா படத்துக்கு நிதியமைச்சர் அன்பழகன், துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறன், ராசா, ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் பொங்கலூர் பழனிச்சாமி, எ.வ. வேலு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு, பரிதி இளம்வழுதி ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.மேலும் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, மேயர் மா.சுப்பிரமணியன், குமரி அனந்தன், ஆர்.எம்.வீரப்பன், செல்வகணபதி, இந்திரகுமாரி உள்பட ஏராளமானோர் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.மேலும் முதலமைச்சர் கருணாநிதி தொட்டுக்கொடுத்த மரக்கன்றை துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வள்ளுவர் கோட்ட பூங்காவில் நட்டார்.பின்னர் அண்ணா சாலையில் உள்ள அண்ணாசிலைக்கு துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.