Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’உண்மையாக உழைத்தவர் பன்னீர்செல்வம்’: ஆதரவு தெரிவிக்கும் சரத்குமார்

Webdunia
சனி, 11 பிப்ரவரி 2017 (23:52 IST)
ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உண்மையாக உழைத்த ஒ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.


 

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள சரத்குமார், “ஓ.பன்னீர்செல்வத்தின் உழைப்பை நேரில் பார்த்திருப்பதாலும், அவரது திறமையிலுள்ள நம்பிக்கையாலும், சமத்துவ மக்கள் கட்சி சகோதரர்களின் வேண்டுகோளின்படி முதல்வர் ஒ. பன்னீர்செல்வத்தின் அனைத்து முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேல்ய்ம், எம்.ஜி.ஆரில் தொடங்கி, ஜெயலலிதாவின் வழிகாட்டுதலில் அதிமுக, தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு உழைத்திருந்தாலும், தற்போது அசாதாரணமான சூழ்நிலையில் சிக்கி இருப்பதை நினைத்து முன்னர் வருத்தம் வெளியிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் உண்மையாக உழைத்த ஒ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதை அறிந்து வேதனையடைந்ததாக ஏற்கனவே குறிப்பிட்டதையும் சரத்குமார் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளார்.

நிதி நிறுவனங்களில் 72 மணி நேரம் சோதனை.! ரூ.170 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல்.!!

நாகை - இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஒத்திவைப்பு.! பயணிகள் ஏமாற்றம்.!!

டீசல் பரோட்டாவா? என்ன கருமம் இது!? – வைரலான வீடியோ! மன்னிப்பு கேட்ட யூட்யூபர்!

ஜம்முவில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி..! நான்கு பேர் சுட்டு கொலை..!!

மனிதன் உணர்ந்து கொள்ள இது உண்மையான தேர்தல் அல்ல..!அதையும் தாண்டி கொடூரமானது.! நடிகர் மன்சூர் அலிகான்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments