தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால் அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.
சென்னை ஆவடி அருகே 10 ஆயிரம் சதுர அடி நிலத்தை அபகரித்ததாக ரங்கநாதன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் ரங்கநாதன் மீது ஆவடி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க ரங்கசாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தபோது ரங்கநாதனுக்கு ஜாமீன் வழங்க தமிழக அரசு வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
ரங்கநாதன் மீது 177 ஏக்கர் நிலமோசடி, கொலை முயற்சி வழக்கு உள்ளதால் அவருக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பை அடுத்து முன்ஜாமீன் மனுவை நீதிபதி பழனிவேல் நிராகரித்தார்.
ரங்கநாதன் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.