தேர்தல் விதிமுறையை மீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் வடிவேலு நத்தம் நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜரானார்.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறி நடிகர் வடிவேலு, நத்தம் தி.மு.க. வேட்பாளர் விஜயன் ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் நடிகர் வடிவேலு, தி.மு.க. வேட்பாளர் விஜயன் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
இதையடுத்து வழக்கு விசாரணையை பிப்ரவரி 14ஆம் தேதிக்கு வைத்த நீதிபதி, இன்றைய தினம் இருவரும் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.