Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
பட்ஜெட் 2021
சட்டசபை தேர்தல் - 2021
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
சென்னையில் மழைநீர் சேகரிப்பு திட்டம்: பிரதமர் பாராட்டு!
Webdunia
புதன், 12 செப்டம்பர் 2007 (12:25 IST)
நிலத்தடிநீர் வளம் தொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கை தொடங்கி வைத்து பிரதமர் மன்மோகன்சிங் பேசுகையில், நிலத்தடி நீர் வளத்தை பெருக்குவதற்காக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று பாராட்டு தெரிவித்தார்.
அனைத்து கிராமங்கள், குடியிருப்புகள், நகரங்கள், புறநகர்ப்பகுதிகளிலும் நிலத்தடி நீரை சேமிப்பதற்காக அந்தந்த பகுதிகளை சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மக்கள் அமைப்புகள் நிலத்தடி நீர்வளத்தை பெருக்குவதற்காக திட்டங்களை தீட்டி செயல்படுத்த வேண்டும். நீர்வள நிர்வாகம் மற்றும் குடிநீர் பராமரிப்பு போன்ற திட்டங்களை டெல்லியில் இருந்து அமல்படுத்த முடியாது. சமுதாய- பிராந்திய அளவில் மக்களே முன்னின்று இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதன் மூலம், அதிக அளவில் பம்பு செட்டுகளை அமைத்து அதிகமான அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. விவசாயத்துக்கான மின்சாரத்துக்கு நியாயமான அளவுக்கு கட்டணம் விதிக்கப்பட்டு இருந்தால் நிலத்தடி நீர் சேமிப்புக்கு சற்று ஊக்கம் அளித்ததாக இருந்து இருக்கும். பொருளாதார, வர்த்தக ரீதியான தண்ணீர் பயன்பாட்டுக்கு தொடர்ந்து மானியம் வழங்க முடியாது என மன்மோகன்சிங் தெரிவித்தார்.
தண்ணீர் சேமிப்பு, குறிப்பாக நிலத்தடி நீர் சேமிப்புக்காக பல்வேறு கொள்கைகள் உள்ளன. நிலைமைக்கு ஏற்ப ஊக்கத்தொகை மற்றும் தண்டனை வழங்குவதன் மூலம் தண்ணீர் சேமிப்பு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும். ஆனால், மனித சமுதாயம் தண்ணீர் பாதுகாப்புக்காக போதிய நடவடிக்கையை எடுக்க வில்லை. மாறாக, உலக அளவில் வெப்ப அதிகரிப்புக்கும், சீதோஷ்ண நிலை மாற்றத்துக்கும் வழிவகுத்து வருகிறது. எனவே இந்த அச்சுறுத்தலில் இருந்து விடுபட தேசிய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வேண்டுகோள் விடுத்தார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!
நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!
மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!
கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!
Show comments