ஊழலுக்கு எதிராக தொடங்கப்பட்ட ஆம் ஆத்மி கட்சி, ஆரம்பிக்கப்பட்ட ஓராண்டிலேயே நாட்டின் தலைநகராக உள்ள டெல்லி மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியது. அங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்ததுடன், காங்கிரஸ் கட்சி ஆதரவுடன் ஆட்சியும் அமைத்தது.
டெல்லி முதலமைச்சரான அரவிந்த் கெஜ்ரிவால் பொறுப்பேற்றார். அதனைத் தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி நாடு முழுவதும் எழுச்சி பெற்று வருகிறது. தமிழகத்திலும் அதன் தாக்கம் இருக்கத்தான் செய்கிறது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் கிறிஸ்டினா சாமி தலைமையில் தமிழகத்தில் உறுப்பினர் சேர்க்கை நடந்து வருகிறது.