நக்கீரன் கோபால் உள்ளிட்ட 3 பேர் மீது தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு வரும் ஏப்ரல் 11 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சரை விமர்சித்து நக்கீரன் பத்திரிகையில் வந்த செய்தியை கண்டித்து தமிழக அரசு சார்பில், ஜெகன் என்ற வழக்கறிஞர் இந்த வழக்கை தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு, சென்னை முதன்மை செசன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி கலையரசு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி முன் நக்கீரன் கோபால், இணை ஆசிரியர் காமராஜ் ஆகியோர் ஆஜரானார்கள். வழக்கில் குற்றம்சாற்றப்பட்ட 3 வது நபரான உமர் முக்தர் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை தள்ளிவைத்த நீதிபதி, ஏப்ரல் 11-ம் தேதி 3 பேரும் ஆஜராகவேண்டும் என்று உத்தரவிட்டார்.