பரபரப்புக்கு புகழ் பெற்ற அஇஅதிமுக தலைமை கழக பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகம் இன்று மத்திய அமைச்சர் மு.க. அழகிரி முன்னிலையில் திமுக.,வில் இணைந்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தீப்பொறி ஆறுமுகம் " கடந்த 9 ஆண்டுகளாக அதிமுக.,வில் சிறை கைதியாக இருந்தேன்; தற்போது விடுதலை ஆனதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்; ஆரம்ப காலம் முதல் அதிமுக.,வில் இருந்து வந்த முன்னாள் அமைச்சர்கள் தற்போது திமுக.,வில் இணைந்து வருகின்றனர்.
தற்போது நானும் இணைவதில் பெருமை அடைகிறேன்; முதல்வர் கருணாநிதியின் சாதனைகளில் ஒன்றாக இடைத்தேர்தல் வெற்றியை குறிப்பிடலாம்; இப்போது மட்டுமல்ல அதிமுக என்றுமே ஆட்சிக்கு வர முடியாது; 25 மாவட்டங்களில் என்னை பேச விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர்;
அதனால் திமுக.,வில் இணைய முடிவு செய்தேன்; இனி இறுதி வரை திமுக.,வில் தான் இருப்பேன்; கருணாநிதி பற்றியும் அவரது சாதனைகள் பற்றியும் தேர்தல் பிரசாரங்களின் போது மக்களிடையே பேசுவேன்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.