Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் முன்கூட்டியே துவங்கியது தென்மேற்கு பருவமழை

Webdunia
ஞாயிறு, 24 மே 2009 (13:08 IST)
தமிழகத்தில் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை முன்கூட்டியே துவங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பெய்யத் துவங்கும். அதன் பிறகே வெப்பத்தின் தாக்கம் குறையும். ஆனால் இந்தாண்டு வழக்கத்தை விட ஒரு வாரம் முன்னதாகவே தென் மேற்கு பருவ மழை தொடங்கிவிட்டது.

தமிழகத்தில், கேரளாவுக்கு அருகேயுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்கிறது. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் விட்டு விட்டு மழை பெய்கிறது.

தென் மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments