நெல்லை மாவட்டம், சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத் தாக்கல் செய்தவர்களில் 20 பேரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
சங்கரன்கோவில் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 18ஆம் தேதி நடக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடைந்ததையடுத்து இன்று மனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.
அப்போது, சரியாக பூர்த்தி செய்யாத 20 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரி தள்ளுபடி செய்தார். தள்ளுபடியானது போக 13 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
ஏற்றுக் கொள்ளப்பட்ட 13 பேரில் 7 மனுக்கள் அரசியல் கட்சி வேட்பாளர்கள் தாக்கல் செய்தவை. தள்ளுபடி செய்யப்பட் 20 மனுக்களும் சுயேச்சை வேட்பாளர்கள் ஆவர்.
அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க., ம.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் இடைத்தேர்தலில் போட்டியிடுகின்றன.